பொங்கலை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 வங்கிக் கணக்கிற்கு வந்தாச்சு- உடனே செக் பண்ணுங்க..
Magalir Urimai Thogai 1000 Jan 9
Magalir Urimai Thogai 1000 Jan 9: பொங்கல் பரிசு தொகுப்பில் ரூபாய் ஆயிரமானது வழங்கப்படாத நிலையில் மகளிர் உரிமைத் தொகையானது பொங்கலை முன்னிட்டு ரூபாய் ஆயிரம் ஜனவரி மாதம் 10ஆம் தேதிக்குள் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது இன்று மகளிர் உரிமை தொகையானது வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000
எனவே மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 பெறும் பயனாளிகள் உடனே தங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்று செக் செய்து கொள்ளுங்கள் மேலும் உடனுக்குடன் தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் தமிழ் நியூஸ் ஜோன் வெப்சைட்டை பின் தொடருங்கள்.
Whatsapp Chennal | Join |
ரூபாய் ஆயிரம் பொங்கல் பரிசு ரொக்கமாக வழங்கப்படாத நிலையில்.. மகளிர் உரிமை தொகையாவது முன்கூட்டியே வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் பொங்கல் தொகுப்பில் ரூ.1000 தரப்படாததன் காரணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று விளக்கம் அளித்தார். இதில் மகளிர் உரிமை தொகை குறித்தும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.
பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை. நல்ல சூழல் விரைவில் உருவாகும்.
அதற்கு முன் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000ஐ பொங்கலுக்கு முன்பாக வழங்க பரிசீலிக்கிறோம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.