மகளிர் உரிமைத் தொகை ரூ. 1500 அதிகரிப்பு!- பயனாளிகளுக்கு வெளியான சூப்பர் சர்ப்ரைஸ்!.. Magalir Urimai Thogai Increased 1500 Rupees

மகளிர் உரிமைத் தொகை ரூ.1500 அதிகரிப்பு பயனாளிகளுக்கு வெளியான சூப்பர் சர்ப்ரைஸ்!..

Magalir Urimai Thogai Increased 1500 Rupees

Magalir Urimai Thogai Increased 1500 Rupees: மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் பயனாளர்களின் வங்கி கணக்கில் ரூபாய் ஆயிரமானது வழங்கி வருகிறது இந்த தொகையை உயர்த்தி பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன அதைப்பற்றிய முழு விவரத் தொகுப்பையும் இச்செய்தியில் நாம் காணலாம்

 

Magalir Urimai Thogai Increased 1500 Rupees

Whatsapp Chennal   Join

மகளிர் உரிமைத் தொகை – தமிழ்நாடு முன்மாதிரி

Magalir Urimai Thogai Increased 1500 Rupees

 பொருளாதார ரீதியாக பெண்கள் யாரையும் சார்ந்திருக்க கூடாது, அவர்களது உழைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழ்நாட்டை பின் தொடர்ந்து கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. டெல்லி இத்திட்டத்திற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் தான் தொகை குறைவு!

Magalir Urimai Thogai Increased 1500 Rupees

தமிழ்நாட்டிற்கு பின்னர் இத்திட்டத்தை தொடங்கிய மாநிலங்களில் கர்நாடகாவில் 2000 ரூபாயும், தெலங்கானாவில் 2500 ரூபாயும், மகாராஷ்டிரா 1500 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு டெல்லியில் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Magalir Urimai Thogai Increased 1500 Rupees

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பேர் பயனாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பயனாளர்களை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அது தொடர்பாக கணக்கெடுப்பு பணிகளும் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

வெளியாகும் சர்ப்ரைஸ் செய்தி

Magalir Urimai Thogai Increased 1500 Rupees

புதிதாக திருமணமாகியவர்கள், புதிய ரேஷன் அட்டைதாரர்கள், ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் என பலரும் திட்டத்தில் இணைய ஆவலாக உள்ளனர். இந்த சூழலில் பயனாளிகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல் உரிமைத் தொகை அளவும் அதிகரிக்க உள்ளதாக கோட்டை வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் 2026 டார்கெட்!

Magalir Urimai Thogai Increased 1500 Rupees

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறிவருகின்றனர். ஆனால் களம் என்பது அவ்வளவு எளிதாக அமைந்து விடாது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, ஆட்சி மீதான அதிருப்தி ஆகியவை திமுகவுக்கு எதிரான சூழலை உருவாக்கும். இதை சமாளிக்க மீண்டும் மகளிர் உரிமைத் தொகையையே திமுக கையில் எடுக்க உள்ளது.

Leave a Comment

error: Content is protected !!