இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?- எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம் இதோ!..
PM UJJWALA Yojana Scheme Apply Tamil
PM UJJWALA Yojana Scheme Apply Tamil: வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. பிரதமரின் உத்வாலா யோஜனா திட்டமாகும். இந்த திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க யாரெல்லாம் தகுதி என்பதை குறித்து நாம் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தினுடைய சிறப்பம்சம் என்ன பலன்கள் என்ன என்பதை சுருக்கமாகவும் பார்க்கலாம்.

இல்லத்தரசிகளுக்கு வரப் பிரசாதமாக அமைந்த திட்டம்தான் இந்த அருமையான உஸ்வாலா யோஜனா திட்டமாகும் கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி துவங்கிய திட்டமானது ஐந்து கோடி சமையல் பிரிந்த இணைப்புகள் வழங்குவதற்காகவே அமல்படுத்தப்பட்டது. இதற்காகவே மத்திய அரசு ரூபாய் 8000 கோடி ஒதுக்கி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாடு இந்த திட்டத்திற்காக புதிய பயனாளிகளுக்கு ரூபாய் 1600 நி நிதி உதவி இந்த திட்டத்தில் தரப்படுகிறது இதன் மூலமாக கேஸ் சிலிண்டரை நிரப்பிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச கேஸ் சிலிண்டர் விண்ணப்பிக்க தகுதி:
சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு (எஸ்இசிசி) பட்டியலை சேர்ந்த குடும்பங்கள் அல்லது பட்டியல் சாதி (எஸ்.சி) குடும்பங்கள், பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) குடும்பங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி), பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டப் பயனாளிகள், அந்தியோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) பயனாளிகள், வனவாசிகள், தீவுகள், ஆற்றுத் தீவுகளில் வசிப்பவர்கள், தேயிலைத் தோட்டம் – முன்னாள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அல்லது மேற்கண்ட வகைகளின் கீழ்வராத ஏழை குடும்பங்கள் போன்ற 7 பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்த இலவச திட்ட இணைப்புக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.

அதேபோல, இந்த திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் சிலிண்டர் இணைப்புக்கு விண்ணப்பிக்க முகவரி சான்று மற்றும் ரேஷன் கார்டுக்கு பதிலாக சுய அறிவிப்பை பயன்படுத்தலாம். அந்தவகையில், கடந்த 01.11.2024 நிலவரப்படி, மொத்தம் 10.33 கோடி பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகள் உள்ளனர்.
இலவச எரிவாயு பெற தகுதிகள் என்னென்ன?
இந்த திட்டத்தின் பலனை பெற வேண்டுமானால், இல்லத்தரசிகளின் பெயரில் மட்டுமே சிலிண்டர் இணைப்பு பெற முடியும். அவர்கள் இந்திய குடிமகளாகவும் இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவர் மட்டுமே இதில் விண்ணப்பம் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல், விண்ணப்பதாரர் பெயரில் சொந்தமாக ரேஷன் கார்டு இருக்க வேண்டும் . ஏற்கனவே அவரது பெயரின் கீழ் எந்தவிதமான எரிவாயு இணைப்பும் இருக்கக் கூடாது.
கிராம புறமாக இருந்தால் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கும் கீழ் இருக்க வேண்டும், நகர்ப்புறமாக இருந்தால் 2 லட்சம் ரூபாய்க்கும் கீழ் இருக்க வேண்டும்.
அது தவிர பட்டியல் இன மற்றும் பழங்குடியின மற்றும் நலிவடைந்த பிரிவை சேர்ந்த பெண்களுக்கும், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வாங்குபவர்களும் இதில் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
இலவச எரிவாயு இணைப்பை பெற வேண்டுமானால், முதலில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் www.pmuy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.. முகப்பு பக்கத்தில் ‘Apply for New Ujjwala 3.0 Connection’ என்பதை கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
இதற்கு நகராட்சி தலைவர் (நகர்ப்புற பகுதி) அல்லது பஞ்சாயத்து தலைவர் (கிராமப்புற பகுதி) வழங்கிய வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கான சான்றிதழ்,
ஆதார் கார்டு,
வாக்காளர் அடையாள அட்டை,
ரேஷன் கார்டு,
ஆதார் நம்பர்,
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,
ஜாதி சான்றிதழ்,
முகவரி சான்றிதழ்,
விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம்,
ஜன் தன் வங்கிக் கணக்கு அல்லது வங்கி பாஸ்புக் போன்றவை தேவைப்படும்.
நீங்கள் விரும்பினால், ஆன்லைனில் மட்டுமல்லாமல் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதால் விறகு அடுப்பு வைத்திருக்கும் குடும்பங்கள் சிலிண்டர் இணைப்புக்கு மாறி வருகின்றனர்.
