பொங்கலுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்க வாய்ப்பு?.. முழு விவரம்..
Pongal Holiday 2025
Pongal Holiday 2025 :பொங்கல் திருவிழா என்பது தமிழர் திருநாளாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகையை நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் இந்த அறுவடை திருவிழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
தமிழகத்தை பொறுத்தவரை தை திருநாள் ஆனது தமிழர் திருநாளாகவும் உழவர் திருநாளாகவும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Whatsapp Chennal | Join |
மார்கழி மாதத்தின் இறுதி நாளை போகி பண்டிகை தொடங்கி தை முதல் நாள் உழவர் திருநாள் அன்று அனைவரும் தங்கள் வீட்டில் பொங்கல் வைத்து கதிரவனுக்கு நன்றி செலுத்துகின்ற நாளாகவும் இயற்கைக்கு நன்றி செலுத்த நமது முன்னோர்கள் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
தை இரண்டாம் நாளானது மாட்டுப் பொங்கல் அன்று உழவர்கள் தமக்கு உதவுகின்ற கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாளாக எந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
தை மூன்றாம் நாளானது காணும் பொங்கல் என்று கொண்டாடப்பட்டு வருகின்றது இந்த நாளில் அனைவரும் தமது சொந்த பந்தங்கள் பெரியோர்களின் ஆசிகளை பெறுவதற்கும் பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருக்கவும் எந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
விடுமுறை அளிக்க வாய்ப்பு
இப்படிப்பட்ட இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசனது எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கும் என பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவ மாணவிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசு அறிவிக்கும் எந்த அறிவிப்பை பொறுத்து அவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த ஊரில் சென்று இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதத்தில் அரசனது விடுமுறை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஆனது ஜனவரி மாதம் 14ஆம் உழவர் திருநாள் மற்றும் ஜனவரி 15ஆம் தேதி மாட்டுப்பொங்கல் அதனை தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி காணும் பொங்கல் அரசு விடுமுறை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அரசு போகி பண்டிகைக்கு பெரும்பாலும் விடுமுறையை அளிக்கிறது ஏனென்றால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வர ஏதுவாக தொடர்ந்து தற்போது இந்த விடுமுறைகளை அரசனது அறிவித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் விடுமுறையானது ஜனவரி 11-ம் தேதி சனிக்கிழமை தொடங்கி ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 13 திங்கட்கிழமை போகி பண்டிகை, ஜனவரி 14 செவ்வாய்க்கிழமை உழவர் திருநாள், ஜனவரி 15 புதன்கிழமை மாட்டுப் பொங்கல், ஜனவரி 16 வியாழக்கிழமை காணும் பொங்கல் எனத் தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மேலும் அரசாணது வெளியூருக்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் சொந்த பணிக்கு செல்ல ஏதுவாக ஜனவரி 17 வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் அதனை தொடர்ந்து வரும் ஜனவரி 18 19 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் என மொத்தமாக சேர்த்து 9 நாட்கள் விடுமுறையாக அளிக்கவும் வாய்ப்புள்ளது. இதை அரசனது பல்வேறு தரப்பினர்களில் இருந்து வரும் கோரிக்கைகளில் இருந்து பரிசீலனை செய்து அறிவிக்க வாய்ப்பு இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம் இது அரசின் முடிவில் உள்ளது இதை பொறுத்திருந்து நாம் பார்க்கலாம்.