Singara Chennai Smart Card Details in tamil
சிங்கார சென்னை பயண அட்டை
Singara Chennai Smart Card Details in tamil மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பாரத ஸ்டேட் வங்கி (SBI ) மற்றும் மாநகர் போக்குவரத்து கழகம் இணைந்து வழங்கும் சிங்கார சென்னை பயண அட்டை வாயிலாக பயணிகள் பயணச்சீட்டு பெற்று பயணம் மேற்கொள்ள ஏதுவாக மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.சா.சி. சிவசங்கர் அவர்கள் 06.01.2025 மாநகர் போக்குவரத்து கழக மத்திய பணிமனையில் அறிமுகம் செய்து வைத்தார்.
Singara Chennai Smart Card
சிங்காரச் சென்னை பயண அட்டையானது பயணிகளுக்கு தடையற்ற மற்றும் பணமில்லா பரிவர்த்தனை பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தொலைநோக்கு திட்டமாகும் இவ்வட்டையை பேருந்துகள், மெட்ரோ, ரயில்கள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம் இந்த முயற்சியானது தமிழ்நாட்டில் பொது போக்குவரத்தை டிஜிட்டல் மயமாக்கும் மற்றும் நவீன மயமாக்குவதற்கான தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகளில் ஒன்றாகும்.
Whatsapp Chennal | Join |
சிங்கார சென்னை பயண அட்டை
மாநகர் போக்குவரத்து கழக அனைத்து பேருந்துகளிலும் ஏற்கனவே சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தும் வகையில் இடிஎம் எலக்ட்ரானிக் டிக்கெட்டின் மெஷின் உபயோகத்தில் உள்ளது திட்டத்தில் முதற்கட்டமாக 50,000 அட்டைகள் எஸ்பிஐ மூலம் கட்டணம் என்று வழங்கப்படும்.
மையங்கள்
பிராட்வே, சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர், செங்குன்றம், வேளச்சேரி, கிண்டி, ஆவடி, தியாகராயநகர், அம்பத்தூர் தோ.பெ, அம்பத்தூர் ஓடி, அடையாறு, அய்யப்பன்தாங்கல், கிளாம்பாக்கம், வடபழனி, ஸ்ரீபெரும்புதூர், பெரம்பூர், சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்களில் உள்ள மாநகரப் போக்குவரத்து கழக பயணச்சீட்டு விற்பனை மையங்கள் வாயிலாக வழங்கப்படும்.
கட்டணம் இன்றி வழங்கப்படும் அட்டை
இவ்வாறு கட்டணம் இன்றி வழங்கப்படும் அட்டைகளை ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் ஆன்லைன் போட்டார்கள், கைபேசி பயன்பாடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநகர் போக்குவரத்து கழக பயணச்சீட்டு விற்பனை மையங்கள் போன்ற பல்வேறு வழிகளில் எந்த அட்டையை எளிதாக ரீசார்ஜ் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் இந்த சிங்கார சென்னை பயண அட்டையை பேருந்துகளில் நடத்துனர் இடம் ரீசார்ஜ் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.