தமிழக அரசு சத்துணவு துறையில் 8997 பணியிடங்கள் அறிவிப்பு எவ்வாறு விண்ணப்பிப்பது முழு வழிமுறை இதோ!..
TN Noon Meal Cooking Assistant 2025
TN Noon Meal Cooking Assistant 2025 : தமிழ்நாட்டில் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. காலியாக இருக்கின்ற 8997 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ், 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய வேளையில் கலவை சாதத்துடன், மசாலா முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட இத்திட்டம் அனைத்து மாநிலங்களாலும் பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே இப்பணியை குறித்த முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
பணியின் பெயர்:
சமையல் உதவியாளர்
சம்பளம்:
தற்போது காலியாகவுள்ள மொத்த பணியிடங்களில், அவசர அவசியம் கருதி, 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3000/- வீதம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுள், 12 மாதங்கள் திருப்திகரமாக பணியினை முடிக்கும் தகுதியான பணியாளர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் (சிறப்பு கால முறை ஊதிய ((STS) நிலை-1 (ரூ.3000-9000)) வழங்கப்பட வேண்டும்.
காலியிடங்களின் எண்ணிக்கை:
சத்துணவுத் திட்டத் துறையில் காலியாக உள்ள 8,997 காலிப்பணியிடங்களைத் தொகுப்பூதியத்தில் நிரப்புவதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
கல்வி தகுதி:
சமையல் உதவியாளர் பணி நியமனத்துக்குக் குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி என்பதி நிர்ணயம் செய்யப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை ?
அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில், அரசாணை (நிலை) எண்.4. சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (சந4-2) துறை, நாள் 06.10.2020-ல் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பணி நியமனம் செய்திட வேண்டும். சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
https://drive.google.com/file/d/1WHC7soH8SL-TvqWDzMdr_1qDwVSseXEy/view
