2025 ஜனவரி முதல் ரூ.1000 உதவி தொகை திட்டத்தில் 75000 நபர் சேர்ப்பு தமிழக அரசு அறிவிப்பு!
TN Puthmai Pen Thittam Virivakkam 2025
TN Puthmai Pen Thittam Virivakkam 2025: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் 2021 ஆம் ஆண்டில் ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக குறிப்பாக மகளிர் முன்னேற்றத்துக்காக பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.

பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண வசதி தரும் விடியல் பயணம் திட்டம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அரசு பள்ளிகளில் உயர்கல்வி சேர மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் என்னும் புதுமைப்பெண் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி தமிழ்நாட்டு மக்களின் பேராதாரரை பெற்று வருகிறார்கள். புதுமைப்பெண் திட்டம் செப்டம்பர் 5/ 2022 அன்று வடசென்னை பாரதி மகளிர் கல்லூரியில் முதன் முதலில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்த்தல்விகள் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இத்திட்டம் வறுமை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மகளிர்க்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு பெற்றோரின் பொருளாதார சுமையை குறைக்கிறது.. மேலும் இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது மாணவியர்கள் இடையே தன்னம்பிக்கை வளர்க்கிறது இத்திட்டத்தின் பயனாக மாணவியர்கள் அதிக அளவில் உயர்கல்விகள் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுமைப் பெண் திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக திருவள்ளுவர் மாவட்டம் பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில் பிப்ரவரி 8/ 2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில் கடந்த செப்டம்பர் 5 /2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு நாளது வரைவில் 4 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவியர்களுக்கு பயன் தருகிறது புதுமைப்பெண் திட்டம்

புதுமைப்பெண் திட்டம் அரசு பள்ளிகளில் படித்துள்ள மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவியர்களுக்கும் மாதம் ஆயிரம் வழங்கும் வகையில் தற்போது விரிவுபடுத்தப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க ஸ்டாலின் அவர்கள் தூத்துக்குடியில் டிசம்பர் 30 2024 திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்க பணிகளை தொடங்கி வைக்கிறார்கள் இதன் பயனாக தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விகள் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவியர் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று பயனடைவார்கள்.
